மீண்டும் தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: நா.முத்துக்குமார்

கவிஞரும் பாடலாசிரியருமான நா.முத்துக்குமாருக்கு இந்த ஆண்டிற்கான தேசிய விருது ‘சைவம்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகே அழகு...’ என்னும் பாடலுக்காக கிடைத்துள்ளது. இதன்மூலம் தேசிய விருதை நா.முத்துக்குமார் இரண்டாவது முறையாக பெறுகிறார். கடந்த வருடம் ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆனந்த யாழை...’ என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.

மீண்டும் தேசிய விருது கிடைத்திருப்பது பற்றி நா.முத்துக்குமார் கூறும்போது, ‘சைவம்’ படத்தில் நான் எழுதிய ‘அழகே அழகு...’ பாடலுக்காக 2014ம் ஆண்டிற்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது. அன்பையும், மனித நேயத்தையும் குழைத்து எழுதிய இந்தப் பாடலுக்கு தேசிய விருது பெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

No comments:

Post a Comment