பாலு மகேந்திரா இருக்கிறார் - இயக்குனர் ராம்

பாலு மகேந்திரா





சிறு கவலையும் அற்ற, சிறு சலனமும் அற்ற பரிபூரண முகத்துடன் அவர் நித்திரையில் இருக்கிறார். "வீடு" படத்திற்காக வாங்கிய இடத்தில் 'Photo Studio'வில் அவர் நித்திரையில் இருக்கிறார். இந்த வீட்டில் இருந்து வந்தவர்கள்தான் நாங்கள் எல்லோரும்.
பதிவாய் இவ்வீட்டிற்கு வருகிற அணில்களும், பூனைக்குட்டிகளும் அவர் ஏன் இன்று தங்களுக்கு உணவு வைக்கவில்லை என்று புரியாமல் வந்துபோயின. யார் அவைகளிடம் சொல்லிப் புரியவைப்பது?
இனி நான் யாரிடம் என் பயத்தையும், துயரத்தையும் பகிர்ந்து கொள்வது? யாரிடம் நான் கேவிக்கேவி அழுவது?
யாராலும் எவற்றாலும் எப்போதும் சமன் செய்யமுடியாத பெரும் அன்பே, பெரும் சக்தியே, பூரண அமைதியே உன் தாழ் பணிந்திருக்க இவ்வாழ்வில் வாய்ப்புக் கிடைத்ததே என் பாக்கியம்.

ராம்.

No comments:

Post a Comment