அழியாத கோலங்கள்தான் பாலு மகேந்திராவின் முதல் தமிழ்ப் படம்

தமிழ் சினிமாவின் காவியப் படங்களில் ஒன்றாகத் திகழும் அழியாத கோலங்கள்தான் பாலு மகேந்திராவின் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்துக்கு சலீல் சவுத்ரி இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு தன் அத்தனைப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை என்பதில் உறுதியாக இருந்தார் பாலு மகேந்திரா. சிறு பிராயத்திலிருந்து வாலிபத்துக்கு மாறும் மூன்றுபேரின் நினைவுகள்தான் இந்தப் படத்தின் கதை. அதுவரை பார்த்திராத ஒளிப்பதிவு, படமாக்கம் என அத்தனை பசுமையான படம். இன்றும் இந்தப் படத்தின் 'நான் எண்ணும் பொழுது..' பாடலைக் கேட்கும்போது மனசு முழுக்க பழைய நினைவுகள் தளும்புவதை உணரலாம் !!

No comments:

Post a Comment