அஜீத் சார் என்றதும் தலைகால் புரியல - விக்னேஷ் சிவன்

Ajith and Vignesh Shivan
போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு படங்களை இயக்கினாரோ, இல்லையோ, தற்போது பாடல்கள் நிறைய எழுதி வருகிறார்.இவர் அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தில் எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் என்ற பாடலை எழுதியுள்ளார்.இதுபற்றி விக்னேஷ் கூறுகையில், நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. இப்பவும் என்னை அறிந்தால் படத்தில் பாடல் எழுத எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை. எல்லாம் கடவுளின் செயல். இப்பாட்டு ஒரு குத்து பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களை பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைத்திருக்கும். பாட்டு அஜீத் சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு பாஸிடீவ் ஆக வந்தது. அதனாலேயே “எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்” என்று ஆரம்பிதேன் என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார்.

No comments:

Post a Comment