போதையின் உச்சத்திற்க்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி சீருடையிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறி செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர்.
பள்ளி சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது. இந்த மாணவனின் புகைப்படத்தை சமூகத்தை சீரழிக்கும் மதுவையும், அதன் கடைகளையும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி அறிமுகம் செய்து திறந்து வைத்தவர்கள் பார்த்தால் நலமாக இருக்கும்!
No comments:
Post a Comment