‘டார்லிங்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ‘நிக்கி கல்ராணி’. இப்படத்தில் நிக்கி பேயாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படம் வெற்றிபெறவே நிக்கிக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இவர் ஆதியுடன் இணைந்து நடித்த ‘யாகாவாராயினும் நாகாக்க’ படம் வெளியானது. இதுதவிர, பாபி சிம்ஹாவுடன் இணைந்து ‘கோ 2’ படத்திலும் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு தற்போது எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். எழில் ஏற்கனவே ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளக்காரதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த புதிய படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு ஒரு பெண்ணை தேடியதாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு நிக்கி கல்ராணி பொருத்தமாக இருப்பார் என்று நிக்கியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்க இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்களை படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர்.http://bit.ly/1ImAoB8
தற்போது விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு தற்போது எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். எழில் ஏற்கனவே ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளக்காரதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த புதிய படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு ஒரு பெண்ணை தேடியதாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு நிக்கி கல்ராணி பொருத்தமாக இருப்பார் என்று நிக்கியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்க இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்களை படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர்.http://bit.ly/1ImAoB8
No comments:
Post a Comment